புதன், 20 பிப்ரவரி, 2008

இதயத்தின் ஒரு பகுதி

நனைந்த மாலை மழை பொழுதில்,

வீதியோரம் பூத்திருக்கும் மலர்களில்,

வானம் கொள்ளா வானவில் காணும்

குழந்தையின் மழலை சிரிப்பில்,

நெடுந்தூர பயணத்தின்

ஜன்னலோர இருக்கையில்,

மடியில் உறங்கும்

மகளின் அணைப்பில்,

என்றோ தொலைத்த இதயத்தின்,

அழியாத ஒரு பகுதி,......


கருத்துகள் இல்லை: