புதன், 20 பிப்ரவரி, 2008

நினைவில் சில கனவுகள்

எட்டும் தொலைவில் வானம்,
விண்மீனும் கண் சிமிட்டும்,
வானவில் வந்து குடை பிடிக்கும்,
நீ என் அருகில் இருந்தால்!!!!
உன் முகத்தில் விழும் கேசம்,
அழகின் கதைகள் பேசும்,
தோளில் சாய்ந்த உன் வாசம்,
என் சட்டையிலும் கொஞ்சம் மிஞ்சும்
நான்கு விழிகளில் ஒரு கனவு ,
என்று ஆகும் நனவு ,
என்றும் எதிலும் எங்கும்
உன் நினைவு!!!!

கருத்துகள் இல்லை: