சனி, 15 மார்ச், 2008

நிலாமகள்

உன் சிறு புன்னகையில்
சிந்தனை மதில்களை
சிதறடித்தாய் !!!
தலை கலைத்து
சிரித்து என்
கவலைகள் யாவும் கலைத்தாய்!!!
சிறுவிரல்கள் ஸ்பரிசத்தில்
கண் அயர்ந்து நீ
உறங்கையில்,
ஆயிரம் கனவுகள்
எனக்கு அளித்தாய்!
மழலை பேச்சில்
மனம் குளிர வைத்தாய்,
நினைவுகளாய் கட்டி அனைத்து
சிறை பிடித்தாய்!
இன்றும் புரியாத
கனவுகளாய் உந்தன்
நினைவுகள்!