புதன், 27 பிப்ரவரி, 2008

காதலுடன் என்றும் நான்

தோளில் நீ சாய்கையில்
சில்லென்று ஒரு தென்றலும்
என்னை சுற்றி சுழன்றது,
என் கை பிடித்து நடக்கையில்
பரந்த வானமும் எந்தன்
காலடியில் சிறைப்பட்டது,
ஒவ்வொரு புன்னகை பூவிலும்
ஆயிரம் மலர்கள்
என்னுள் பூத்தது,
ஆயிரம் வேள்விகள் புரிந்தாலும்
கிடைக்கா வரமா நீ?
உன் நினைவுகள்
என்னுள் கலந்திட,
வெறுமை அனலாய் எரித்திட
காதலுடன் என்றும்
நான்!

புதன், 20 பிப்ரவரி, 2008

இதயத்தின் ஒரு பகுதி

நனைந்த மாலை மழை பொழுதில்,

வீதியோரம் பூத்திருக்கும் மலர்களில்,

வானம் கொள்ளா வானவில் காணும்

குழந்தையின் மழலை சிரிப்பில்,

நெடுந்தூர பயணத்தின்

ஜன்னலோர இருக்கையில்,

மடியில் உறங்கும்

மகளின் அணைப்பில்,

என்றோ தொலைத்த இதயத்தின்,

அழியாத ஒரு பகுதி,......


நினைவில் சில கனவுகள்

எட்டும் தொலைவில் வானம்,
விண்மீனும் கண் சிமிட்டும்,
வானவில் வந்து குடை பிடிக்கும்,
நீ என் அருகில் இருந்தால்!!!!
உன் முகத்தில் விழும் கேசம்,
அழகின் கதைகள் பேசும்,
தோளில் சாய்ந்த உன் வாசம்,
என் சட்டையிலும் கொஞ்சம் மிஞ்சும்
நான்கு விழிகளில் ஒரு கனவு ,
என்று ஆகும் நனவு ,
என்றும் எதிலும் எங்கும்
உன் நினைவு!!!!